சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

Mahendran
வியாழன், 27 பிப்ரவரி 2025 (18:58 IST)
சென்னையில் மெரினா கடற்கரை உட்பட ஐந்து கடற்கரைகளின் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா  தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர், ஆணையர் உள்பட பலர் பங்கேற்றனர். இன்றைய கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
அதில், சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் மற்றும் புது கடற்கரைகளின் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
மெரினா கடற்கரையை ஒரு வருட காலத்திற்கு தூய்மை செய்ய சுமார் ஏழு கோடி ரூபாய் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற நான்கு கடற்கரைகளுக்கும் ஒரு வருட தூய்மை பணிக்காக சுமார் 4 கோடி ரூபாய்க்கும் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments