Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

Mahendran
வியாழன், 27 பிப்ரவரி 2025 (18:58 IST)
சென்னையில் மெரினா கடற்கரை உட்பட ஐந்து கடற்கரைகளின் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா  தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர், ஆணையர் உள்பட பலர் பங்கேற்றனர். இன்றைய கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
அதில், சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் மற்றும் புது கடற்கரைகளின் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
மெரினா கடற்கரையை ஒரு வருட காலத்திற்கு தூய்மை செய்ய சுமார் ஏழு கோடி ரூபாய் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற நான்கு கடற்கரைகளுக்கும் ஒரு வருட தூய்மை பணிக்காக சுமார் 4 கோடி ரூபாய்க்கும் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments