Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 7 நாட்கள் முழு முடக்கம்! – அதிகாரிகள் ஆலோசனை!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (09:34 IST)
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் சூழலில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முழு முடக்கத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 5 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஆலோசித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் மொத்தமாக 7 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments