Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 7 நாட்கள் முழு முடக்கம்! – அதிகாரிகள் ஆலோசனை!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (09:34 IST)
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் சூழலில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முழு முடக்கத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 5 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஆலோசித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் மொத்தமாக 7 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments