Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

Mahendran
திங்கள், 20 மே 2024 (16:06 IST)
சென்னையில் தெரு நாய் கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதை அடுத்து நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சி இடம் லைசென்ஸ் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. மேலும் பொதுமக்களை நாய் கடித்தால் நாயின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் நாய்கள் மட்டுமின்றி மாடுகள் முட்டியும் பலர் காயமடைந்தும் உயிரிழந்தம் ஏற்பட்டு வருவதை அடுத்து மாடுகள் வளர்க்கவும் லைசன்ஸ் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி விரைவில் உத்தரவிட இருப்பதாக கூறப்படுகிறது.  
 
மாடுகள் வளர்ப்பவர்கள் அதை சாலைகளில் மேய விடுவதால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதியில் உள்ளனர் என்றும் குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்வோர் வேலைக்கு செல்பவர்களுக்கு பெரும் இடைஞ்சலாக கால்நடைகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது 
 
இதனை அடுத்து மாடுகள் வளர்ப்பவர்களும் லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்ற நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments