வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

Mahendran
திங்கள், 20 மே 2024 (16:00 IST)
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
 தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் அது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவையிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கோடையில் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவானால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments