Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் தடுத்தால் காய்கறி வியாபாரிகள் புகார் அளிக்கலாம்! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:03 IST)
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி விற்பவர்கள் காவல் துறையினரால் தடுக்கப்பட்டால் புகார் அளிக்க சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு மூன்று சக்கர வாகனங்கள், தள்ளு வண்டிகளில் பழங்கள், காய்கறிகளை விற்க அனுமதித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்கறி விற்கும்போது போலீஸார் தடுத்தால் புகார் அளிப்பதற்கான எண் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்கள், தள்ளு வண்டியில் காய்கறி விற்பவர்கள் போலீஸார் இடை மறித்தால் 044-4568 0200, 94999 32899 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments