Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மழை: மாநகராட்சி துரித நடவடிக்கையால் தண்ணீர் தேங்கவில்லை என தகவல்..!

சென்னை மழை: மாநகராட்சி துரித நடவடிக்கையால் தண்ணீர் தேங்கவில்லை  என தகவல்..!
, புதன், 15 நவம்பர் 2023 (07:49 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த போதிலும் சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கையால் தண்ணீர் தேங்கவில்லை  என தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும், மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
மேலும் நகரில் உள்ள அனைத்து சிசிடிவி  கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக  வடிந்தது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் மீட்பு படைகள் உள்ளதால்  மழை குறித்த சேதம்  தகவல் தெரிந்த உடனே சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று  மழை நீரை அகற்றும் பணியில் மீட்பு படையினர் உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் கன மழையால் எந்த பெரிய பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது என்று சொல்லி
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்