Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி; தகரம் அடிக்கப்படுமா? – சென்னை மாநகராட்சி பதில்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (10:50 IST)
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் இந்திய அளவிலான கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள சென்னை மாநகராட்சி “சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டாலும் வீடுகளில் தகரம் அடிக்கப்படாது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments