Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற அறிவுரையை ஏற்று மெரீனாவில் வாக்கிங் சென்ற கமிஷனர்.

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:31 IST)
சென்னை மெரீனாவை சுத்தப்படுத்தும் வழக்கின் விசாரணை நேற்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, சுத்தப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனரும், காவல்துறை கமிஷனரும் தினசரி மெரீனாவுக்கு வாக்கிங் செல்லலாம் என்று அறிவுறுத்தியது.

நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று இன்று காலை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் சென்னை மெரீனாவுக்கு வாக்கிங் சென்று, மெரீனா சுத்தப்படுத்தப்படும் பணியையும் மேற்பார்வையிட்டார். அவருடன் சக அதிகாரிகளும் இருந்தனர்.

இதேபோல் மெரீனா சுத்தப்படுத்தும் பணி முடியும்வரை மாநகராட்சி கமிஷனரும், போலீஸ் கமிஷனரும் வாக்கிங் சென்றால் மெரீனா சுத்தப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்படாது என்றும், மெரீனா இன்னும் ஒருசில நாட்களில் பொலிவு பெறும் என்றும் மெரீனாவிற்கு தினந்தோறும் வாக்கிங் வரும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments