Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் பார்த்திபன் வீட்டில் திருட்டு : கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Advertiesment
நடிகர் பார்த்திபன் வீட்டில் திருட்டு : கமிஷனர் அலுவலகத்தில் புகார்
, வியாழன், 13 டிசம்பர் 2018 (17:43 IST)
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வீடு திருவான்மியூரில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவரது வீட்டில், பீரோ லாக்கரில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது.இது குறித்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் திருட்டு போன நகைகள் , பணம் குறித்து  இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதனைச் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
 
அதில் கடந்த ஏப்ரம் மாதம் தன் வீட்டில் திருட்டு போன 60 சவரன் நகைகளூடன் ஒன்றைரை கிலோ தங்க நகைகள் திருட்டு போயிருப்பதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில்  கொடுத்துள்ள புகார் பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் குற்றவாளிகளை கண்டுபிடித்து திருட்டு போன நகைகளை மீட்டு தருமாறு இந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரத்தில் புயல்: சென்னைக்கு ஆபத்தா?