Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக் கொண்டாட்டம்… சென்னையில் மட்டும் 18 டன் குப்பை!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (17:40 IST)
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சென்னையில் மட்டும் 18 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான் முதலில் நியாபகத்துக்கும் வரும். ஆனால் பட்டாசுகள் ஏற்படுத்தும் புகையால் ஏற்படும் காற்று மாசுபாடு மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதனால் தமிழகத்தில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இதுபோல அனுமதிக்கப்பட்ட நேரம் அல்லாது மற்ற நேரத்தில் வெடித்த 348 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளியால் பட்டாசு வெடித்ததில் மட்டும் சென்னையில் 18 டன் குப்பைகள் உருவாகியுள்ளன. இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் 3, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சுமார் 18.673 டன் அளவுக்கு பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments