Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் வசூல்! – தனியார் மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (11:01 IST)
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக லட்சக் கணக்கில் பணம் வசூல் செய்த தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. அதன்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விவரத்தையும் மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

ஆனால் பல தனியார் மருத்துவமனைகள் அரசு அறிவுறுத்தல்களை மீறி அதிகமான தொகையை வசூல் செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பல தனியார் மருத்துவமனைகளிலும் அடிக்கடி சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது நோயாளி ஒருவருக்கு 19 நாட்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் ரூ.12 லட்சம் வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள் கொரோனா சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர். இதுபோல அதிக தொகை வசூல் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments