கொரோனா சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் வசூல்! – தனியார் மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (11:01 IST)
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக லட்சக் கணக்கில் பணம் வசூல் செய்த தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. அதன்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விவரத்தையும் மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

ஆனால் பல தனியார் மருத்துவமனைகள் அரசு அறிவுறுத்தல்களை மீறி அதிகமான தொகையை வசூல் செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பல தனியார் மருத்துவமனைகளிலும் அடிக்கடி சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது நோயாளி ஒருவருக்கு 19 நாட்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் ரூ.12 லட்சம் வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள் கொரோனா சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர். இதுபோல அதிக தொகை வசூல் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments