Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1200 க்கும் அதிகமான பாதிப்புகள்! – தொடர் அபாயத்தில் சென்னை!

Webdunia
திங்கள், 4 மே 2020 (10:43 IST)
சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1200க்கும் அதிகமாக மாறியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. மத்திய அரசால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெட்ரோ நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.

மொத்தமாக சென்னையில் 1,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். 226 பேர் குணமடைந்துள்ளனர்

சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 287 பேருக்கும், ராயப்புரத்தில் 200 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன., கோடம்பாக்கத்தில் 177 பேரும், அண்ணா நகரில் 107 பேரும், தண்டையார்பேட்டையில் 97 பேரும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments