Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையை விடாது கருப்பாய் கொரோனா!!

சென்னையை விடாது கருப்பாய் கொரோனா!!
, செவ்வாய், 2 ஜூன் 2020 (11:31 IST)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல். 
 
நேற்று தமிழகத்தில் 1162 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,162 பேர்களில் சென்னையில் 964 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,936 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1,867, தண்டையார்பேட்டையில் 1839, தேனாம்பேட்டையில் 1,770, அண்ணா நகரில் 1,334, அடையாறில் 883, வளசரவாக்கத்தில் 890 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 
webdunia
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் முக்கிய புள்ளி பாஜகவில் இணைகிறார்! – க்ளூ கொடுத்த பாஜக யூத் விங்!