Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆயிரத்தை கடந்த பாதிப்புகள் – சென்னை நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (11:01 IST)
சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்ததை தொடர்ந்து சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் சென்னை மிகவும் மோசமான அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதுவரை சென்னையில் 20,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். 10,502 பேர் குணமடைந்துள்ள நிலையில் 10,066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையின் ஐந்து மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 3,717 ஆக உள்ளது. தண்டையார்பேட்டையில் 2,646 பேரும், தேனாம்பேட்டையில் 2,374 பேரும், கோடம்பாக்கத்தில் 2,323 பேரும், திருவிக நகரில் 2,073 பேரும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments