Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிய சிறுவன்; பிணமாக மீட்பு!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (10:31 IST)
ராஜஸ்தானில் நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிய மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பலர் பப்ஜி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி இளைஞர்கள், சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாப்பகுதியில் 14 வது சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை இமாச்சல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கிய அந்த சிறுவன் தொடர்ந்து அதை விளையாடுவதிலேயே ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.

நேற்று பின்னரவு 3 மணி வரை கேம் விளையாடி கொண்டிருந்தவர் காலையில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டு ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர், ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளார். சிறுவன் பப்ஜி விளையாட்டால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments