Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம்

மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம்
, புதன், 10 நவம்பர் 2021 (09:22 IST)
சென்னையில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல். 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்து நான்கு நாட்கள் ஆகியும் சில இடங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். 
 
ஆனால், சென்னையில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் வெள்ளத்தில் மூழ்கிய 14 சுரங்கப்பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.  
 
மேலும், தொடர் மழையால் சென்னையில் விழுந்த 116 மரங்களும் அகற்றப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 7,180 புகார்களில் 3,593 புகார் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசீரை கரம்பிடித்த மலாலா - திருமண புகைப்படங்கள் வைரல்!!