Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: கல்லூரி மாணவர் தற்கொலை!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (14:38 IST)
சென்னையில் ஆன்லைன் விளையாட்டில் மோகம் கொண்ட மாணவர் அதில் பணத்தை இழந்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தக்கரை பகுதியை சேர்ந்தவர் நித்திஸ். கல்லூரி மாணவரான இவர் சமீப காலமாக அங்குள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆன்லைன் சூது விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட நித்திஸ் தொடர்ந்து அதில் பணம் செலுத்தி விளையாடி வந்திருக்கிறார். அதில் பல முறை தோல்வியடைந்து பணத்தை இழந்துள்ளார்.

தனது முழு பணத்தையும் இழந்த நிலையில் தான் பணிபுரிந்த கடையில் இருந்த பணத்தையும் திருடி விளையாடி தோற்றதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த நித்திஸ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments