Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேகமூட்டமாக காணப்படும் சென்னை : பொதுமக்கள் மகிழ்ச்சி

மேகமூட்டமாக காணப்படும் சென்னை : பொதுமக்கள் மகிழ்ச்சி
, வெள்ளி, 6 மே 2016 (16:46 IST)
சென்னையின் இன்று மாலை முதல் வானம் மூக மூட்டமாக காணப்படுவது, சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
இது கோடைக் காலம் என்பதால், மார்ச் மாதத்திலிருந்தே வெயில் கொளுத்த ஆரம்பித்தது. இரவில் வீட்டிற்குள் தூங்க முடியாமலும், பகலில் வெளியே வர முடியாமலும் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
 
அதில், சமீபத்தில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அதன் பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டியது. வரும் நாட்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்தது. இது பொதுமக்கள் மனதில் பீதியை கிளப்பியிருந்தது.
 
இந்நிலையில், சென்னையில் இன்று மாலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. லேசான குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. எந்நேரமும் மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலில் வெந்து தணிந்த சென்னை வாசிகளுக்கு, இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
மேலும், தமிழகத்தின் சில இடங்களில் மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் அத்தி கட்டி ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பக்கம் விஜய்: தேர்தல் பணியாற்ற ரசிகர்களுக்கு உத்தரவு?