Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சீட்டு மோசடி; பாஜக தேர்தல் பொறுப்பாளர் கைது!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (17:32 IST)
சென்னையில் சீட்டு நடத்தி பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் தேசிய கட்சியான பாஜகவும் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாஜக வடசென்னை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வி.எஸ்.சீனிவாசன் என்பவர் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கனக துர்கா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments