Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்: டாக்காவுக்கு முதல் விமானம்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (12:33 IST)
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரூபாய் 1260 கோடியில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையம் கட்டப்பட்டது என்பதும் பிரதமர் மோடி சமீபத்தில் இதை திறந்து வைத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் சுமார் 3 கோடி பயணிகளை கையாள முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புதிய விமான நிலையத்தின் முனையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த முனையத்திலிருந்து முதல் விமானம் டாக்காவுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி முதல் விமானத்தில் செல்லும் பயணிக்கு விமான நிலைய அதிகாரிகள் மலர்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments