Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயல்புக்கு வந்தது சென்னை விமான நிலையம்.. பயணிகள் நிம்மதி..!

Siva
சனி, 20 ஜூலை 2024 (09:08 IST)
மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சில விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் இதனால் பயணிகள் கடும் சிக்கலில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை விமான நிலையம் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள விமான நிலையங்கள் மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக முடங்கிய நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் முழுமையாக இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும் இதனால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மைக்ரோசாப்ட் மென்பொருளில் ஒரு செக்யூரிட்டி அம்சத்தை அப்டேட் செய்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் அந்த அப்டேட்டை கேன்சல் செய்துவிட்டால் இந்த பிரச்சனை தற்போதைக்கு சரியாக விடும் என்று மைக்ரோசாப்ட் சொன்னதை அடுத்து பலர் அந்த அப்டேட்டை கேன்சல் செய்து வருகின்றனர்.

இதனை அடுத்து மைக்ரோசாப்ட் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருவதாகவும் சென்னை விமான நிலையம் உள்பட உலகம் முழுவதும் விமான நிலையங்களில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் செக்யூரிட்டி அப்டேட்டை கேன்சல் செய்யாதவர்களுக்கு இன்னும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments