Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி.. விமான அட்டவணையில் மாற்றம்..!

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:55 IST)
சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை அடுத்து, விமான நிலைய அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை விமான அட்டவணையில் மாற்றம் செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
இன்று பிற்பகல் 1:45 முதல் 3:15 மணி வரை சென்னை விமான நிலைய வான் தடம் மூடப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் வான் தடம் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், பயணிகள் தங்களின் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு எந்தெந்த விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதை குறிப்பாக தெரிந்து, தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, வான் சாகச நிகழ்ச்சியை காண ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து இறங்கிய பயணிகள்..!

ரஜினிகாந்த் உடல்நிலை நிலவரம்.. மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!

"புதிய அமைச்சரவை பட்டியல்" - உதயநிதிக்கு 3-வது இடம்.!

நேபாளத்தில் ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments