Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேடீஸ் ஹாஸ்டலில் ஹிட்டன் கேமரா: காமுகன் சிக்கியது எப்படி?

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (16:23 IST)
சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகர் முதல் தெருவில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் குளியல் அறை போன்ற இடங்களில் ஹிட்டன் கேமரா பொருத்தப்பட்டிருந்தது குறித்த செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், இந்த விஷயத்தில் கேமரா வைத்திருப்பது எப்படி கண்டறியப்பட்டது அந்த காமுகன் எப்படி சிக்கினான் என்ற தகவல் கிடைத்துள்ளது. சம்பத்ராஜ் திருச்சியில் இருந்து சென்னை வந்தவர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வீட்டை ஹாஸ்டலாக மாற்றி அதை இரண்டு மாதங்களாக நடத்தி வருகிறார். 
 
குறிப்பிட்ட நாளில், பாத்ரூமிலுள்ள பிளக் சாக்கெட்டில், ஹாஸ்டலில் தங்கியிந்த பெண் ஒருவர் ஹேர்டிரையர் பிளக்கை சொருக முயற்சித்துள்ளார். ஆனால், பிளக் செய்ய முடியவில்லை. இதனால், சாக்கெட்டை கழற்றி சரி செய்ய முயன்றுள்ளார். அப்போதுதான் கேமரா இருப்பது தெரியவந்துள்ளது. 
மேலும், ஹாஸ்டல் ரூமில் மொத்தம் ஆறு கேமராக்களை கண்டுபிடித்தனர். இதன் பின்னர் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டார் என தகவ்ல் வெளியாகியுள்ளது. 
 
இன்னும் சிலர், விடுதியில் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால் ரூமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்குமோ என  சந்தேகித்து மொபைலில் ஹிட்டன் கேமரா டிடக்டர் செயலியை பதிவேற்றம் செய்து சோதனை செய்ததில் இந்த விவகாரம் தெரிய வந்தது எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments