Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறம் மாறும் சென்னை நகர பேருந்துகள்: எடப்பாடிக்கு ராசியான கலரா?

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (08:45 IST)
முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவுக்கு பச்சை நிறமும், கருணாநிதிக்கு மஞ்சள் நிறமும் ராசியான நிறங்களாக கூறப்பட்டது. அவர்களது ஆட்சியில் இந்த இரண்டு நிறங்களுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிகப்பு நிறம் ராசியான நிறம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பல துறைகள் சிகப்பு நிறத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் குறிப்பாக சென்னை நகர பேருந்துகள் சிகப்பு நிறத்திற்கு மாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்து துறை தற்போது கடுமையான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் ஊழியர்களின் நிலுவை பிஎப் பணம் உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தாமல், பேருந்துகளின் நிறத்தை மாற்றும் நடவடிக்கை இப்போது தேவையா? என்று போக்குவரத்து ஊழியர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments