Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டேமேஜ் ஆன சுங்கச்சாவடி; திறக்கப்படும் தேதி ஒத்திவைப்பு

டேமேஜ் ஆன சுங்கச்சாவடி; திறக்கப்படும் தேதி ஒத்திவைப்பு

Arun Prasath

, புதன், 26 பிப்ரவரி 2020 (13:32 IST)
கடந்த மாதம் செங்கல்பட்டில் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடியை திறப்பதற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி, பேருந்து ஓட்டுநர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சுங்கச்சாவடியில் நொறுக்கப்பட்ட அனைத்து கண்ணாடிகளும் புதுப்பிக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்கள், மின் விளக்குகள் போன்றவை பழுது பார்க்கப்பட்டன. இந்த இடைப்பட்ட நாட்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி நேற்று திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், சுங்கச்சாவடி சார்பில் காவல்நிலையத்தில் அனுமதி கடிதம் பெறாததால் திறக்கப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் காதலியின் திருமணத்தை நிறுத்த திட்டம் – போஸ்டர் அடித்து ஒட்டிய காதலன் கைது !