Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு; ரவுடிகள் என்கவுண்ட்டர்! – செங்கல்பட்டில் பரபரப்பு!

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு; ரவுடிகள் என்கவுண்ட்டர்! – செங்கல்பட்டில் பரபரப்பு!
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:37 IST)
செங்கல்பட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவர் போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டி பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகிய இருவர் கடந்த சில காலமாக தலைமறைவாக இருந்துள்ளனர். சமீபத்தில் இருவரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொன்ற வழக்கில் இவர்களை போலீஸார் தேடி வந்துள்ளனர்.

அவர்கள் பதுங்கியிருக்கும் இடம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது அவர்கள் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாளால் போலீஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக போலீஸார் சுட்டதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த என்கவுண்ட்டர் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரிதாபங்கள், நக்கலைட்ஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கம்!