Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாதி கொலை ; 15 நாட்களில் குற்றப்பத்திரிக்கை : போலீசார் மும்முரம்

சுவாதி கொலை ; 15 நாட்களில் குற்றப்பத்திரிக்கை : போலீசார் மும்முரம்
, ஞாயிறு, 17 ஜூலை 2016 (11:46 IST)
சுவாதி கொலை வழக்கில் இன்னும் 15 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
சென்னைய சேர்ந்த இளம் பெண்  பொறியாளர் சுவாதி வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்படு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
அவரை மூன்று நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. சுவாதி தன்னை அசிங்கமாக திட்டியதில், ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில், ஏறக்குறைய ராம்குமாருக்கு எதிரான அனைத்து ஆதரங்களையும் போலீசார் திரட்டி உள்ளனர். தடவியல் துறையின் அறிக்கை வந்தபின், மொத்த ஆதாரங்களையும் திரட்டி, இன்னும் 15 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டு விட்டார் : போலீசார் தரப்பு தகவல்