Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

Siva
புதன், 28 மே 2025 (08:03 IST)
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபல தனியார் பொழுதுபோக்கு பூங்காவில்  160 அடி உயரம் கொண்ட ராட்சத ராட்டினத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதால், அதில் ஏறி இருந்த 30-க்கும் மேற்பட்டோர் ராட்டினம் நடுவே மாட்டி, சுமார் 3 மணி நேரமாக வானில் சிக்கி தவித்தனர்.
 
இவர்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேல் உயரத்தில் சிக்கியவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் போன்ற அடிப்படை உதவிகளை வழங்கும் முயற்சி நடைபெற்றது.
 
கிரேன் உதவியுடன் அனைவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்தன.  சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொழுதுபோக்கு பூங்காவின் பாதுகாப்பு முறைமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம், பொழுதுபோக்கு வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments