சந்திரபிரியங்கா 3 நாட்களுக்கு முன்பே பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: சபாநாயகர் விளக்கம்..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (14:24 IST)
புதுச்சேரி   போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்ததாக செய்தி வெளியான நிலையில் அவர்  3 நாட்களுக்கு முன்பே பதவியில் இருந்து  நீக்கப்பட்டார் என புதுவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி   போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று தன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜனுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் செல்வம், ‘சந்திரபிரியங்கா 3 நாட்களுக்கு முன்பிருந்தே பதவியில் இருந்து  நீக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில்  போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments