Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.....வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:18 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும், கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், சேலம்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட் பகுதிகளில் மிதமான மழை பெய்யுமெனவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வான மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments