Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
திங்கள், 2 செப்டம்பர் 2024 (07:55 IST)

தென்கிழக்கு பருவமழை, வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த மாதம் முதலாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

 

இந்நிலையில் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாக்குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments