Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (14:57 IST)
தமிழகத்தின் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழ் நாடு, புதுச்சேரி – காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும். நாளை மற்றும்  நாளை மறு நாள்( 01-03-23) தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அங்கு அதிபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ் காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 21-22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments