Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் இந்த நகரில் விமான நிலையம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (18:34 IST)
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள இன்னொரு நகரில் விமான நிலையம் அமைக்க இருந்த நிலையில் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான ஓசூரில் விமான நிலையம் தொடங்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மத்திய அமைச்சர் விகே சிங் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவில் வேறு விமான நிலையங்கள் அமைக்க கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் ஓசூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் நெய்வேலி, வேலூர் ஆகிய பகுதிகளில் விமான நிலைய அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க இந்திய விமானப்படை நிலம் வழங்க உள்ளதாகவும் ராமநாதபுரத்திலும் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் வி கே சி தெரிவித்தார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments