Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை ஏமாற்றிய மத்திய அரசு; திமுக வின் சார்பில் அவசர செயற்குழு கூட்டம்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (08:14 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக, திமுக செயல்  தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதற்கு 6 வாரம் கெடுவை விதித்தது. அந்த கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மத்திய அரசு  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் தலைமையில்,  அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments