Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை ஏமாற்றிய மத்திய அரசு; திமுக வின் சார்பில் அவசர செயற்குழு கூட்டம்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (08:14 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக, திமுக செயல்  தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதற்கு 6 வாரம் கெடுவை விதித்தது. அந்த கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மத்திய அரசு  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் தலைமையில்,  அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு

இந்தியா எடுத்த ஒரு சின்ன முயற்சி.. ₹8.5 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments