Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

Siva
செவ்வாய், 11 மார்ச் 2025 (19:28 IST)
நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கை மார்ச் 14ஆம் தேதி முதல் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரபலங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் எழும் சூழ்நிலைகளில், மத்திய அரசு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வரிசையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் சில அச்சுறுத்தல்கள் எழுந்ததை தொடர்ந்து, மத்திய அரசு அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் தீர்மானித்தது.
 
இந்நிலையில், மார்ச் 14ஆம் தேதி முதல் இந்த பாதுகாப்பு அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, வெளிநாட்டு பாதுகாப்பு பணியாளர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். இனி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
 
வழக்கமாக, Y பிரிவு பாதுகாப்பு பெற்ற நபருக்கு துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்திய 8 முதல் 11 பாதுகாப்பு அதிகாரிகள் இணைக்கப்படுவர். ஆனால், இந்த பாதுகாப்பு விஜய் தமிழகத்தில் இருக்கும் நேரத்தில் மட்டுமே அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments