இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 11 மார்ச் 2025 (19:19 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்றைய வர்த்தக முடிவின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து, ரூபாய் 87.21 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மந்த நிலை மற்றும் வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளில் ஒரு நிலையற்ற போக்கு இருந்து வருகிறது.
 
மேலும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால், இந்திய ரூபாயும் ஏற்ற இறக்க நிலையை எதிர்கொண்டு வருகிறது.
 
இந்த நிலையில், வங்கிகள் இடையே அன்னிய செலவாணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 87.37 ஆக தொடங்கி, வர்த்தகத்தின் இடையில் 87.17 ஆக உயர்ந்து இறுதியில் 10 உயர்ந்து 87.21 ஆக வர்த்தகம் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்த நிலையில், இன்று 10 காசுகள் உயர்ந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments