Webdunia - Bharat's app for daily news and videos

Install App

196 கருணை மதிப்பெண்களுக்கு சிக்கல்: நாளை மேல்முறையீடு செய்கிறது சி.பி.எஸ்.இ?

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (20:45 IST)
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கேள்வித்தாளில் மொழிபெயர்ப்பு பிழை இருந்ததால் 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பால் மீண்டும் மதிப்பெண் பட்டியல் தயாரித்து மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டிய நிலை சி.பி.எஸ்.இக்கு உள்ளது 
 
புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டு மீண்டும் மருத்துவ கவுன்சிலிங்கை நடத்துவது எப்படி சாத்தியமாகும் என்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாளை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் இந்த வழக்கை தொடுத்து வெற்றியும் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரும், மேல்சபை எம்.பி.யுமான டி.கே.ரெங்கராஜன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் சுப்ரீம் கோர்ட் உடனடியாக உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் டி.கே.ரெங்கராஜன் தரப்பு வாதத்தை கேட்ட பின்னரே தீர்ப்பை வழங்க முடியும். இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments