Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

Siva
செவ்வாய், 26 நவம்பர் 2024 (14:24 IST)
சென்னையில் தொழிலதிபர், ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் முன்னாள் மத்திய அரசின் அதிகாரி ஆகிய மூன்று பேரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் சேகர் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். அதேபோல், மயிலாப்பூரில் உள்ள ஓய்வு பெற்ற துறைமுக இணை இயக்குநர் புகழைந்து என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
இதனை அடுத்து, அயப்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்தின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். மேற்கண்ட மூவரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றதாகவும், வீட்டிலிருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சோதனை எந்த வழக்கிற்காக நடத்தப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், அதற்கான விவரங்கள் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments