Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: எப்.ஐ.ஆர் பதிவு செய்தது சிபிஐ

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:09 IST)
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: எப்.ஐ.ஆர் பதிவு செய்தது சிபிஐ
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன .
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சையை சேர்ந்த மாணவி லாவண்யாயை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக காவல்துறை விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டும் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க எந்தவித தடையும் இல்லை என உத்தரவு பிறப்பித்தது.
 
 இந்த நிலையில் தற்போது தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்து விரைவில் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments