Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்:  சிபிசிஐடி எச்சரிக்கை
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:56 IST)
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனி நபரோ அல்லது நிறுவனமோ புலன்விசாரணை செய்ய கூடாது என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது
 
கள்ளக்குறிச்சி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து தற்போது சிபிசிஐடி இதுகுறித்து விசாரணை செய்து வருகிறது 
இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் இந்த மாணவியின் மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் புலன் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரும் விசாரணை செய்யக் கூடாது என்றும் அவ்வாறு விசாரணை செய்து இணையதளங்களில் அல்லது யூடியூப் சேனலில் பதிவு செய்தால் அந்த சேனல்கள் மூடப்படும் என்றும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
மேலும் இவ்வழக்கில் ஏதேனும் தகவல் கிடைத்தால் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனா-தைவான் பதற்றம் எதிரொலி: ஏவுகணை சோதனையை ஒத்திவைத்த அமெரிக்கா!