Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்க மறுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (11:38 IST)
ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் இறுதி தீர்ப்பை வழங்க கூடாது என ஸ்டெர்லைட் நிறுவனம் கோரியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்கேப் ஆன ஆனந்த்.. கரூர் செல்லும் விஜய்! 20 பேர் கொண்ட குழு ஏற்பாடு!

பெங்களூரில் பதுங்கிய புஸ்ஸி ஆனந்த்? சல்லடை போட்டு தேடும் தனிப்படை!

கரூர் மரணங்களுக்கு விஜய்தான் முதல் காரணம்! - சீமான் பகிரங்க குற்றச்சாட்டு!

வன்முறையாக மாறிய Gen Z போராட்டம்! 3 பேர் பலி! - மொராக்கோவில் அதிர்ச்சி!

கரூர் கூட்ட நெரிசல்: சி.பி.ஐ. விசாரணை கோரிய பா.ஜ.க. கவுன்சிலரின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments