Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மக்களை திசை திருப்பவே காவிரி பிரச்சினை' - தமிழிசை குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (19:20 IST)
கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறத்தான் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ‘’கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறத்தான் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.  தமிழக எல்லையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் பாஜகவும் பங்கேற்க தயாராக இருக்கிறோம். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமை குறித்து மத்திய நீர்வள அமைச்சகத்திடம் பேசி உள்ளோம்’’ என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments