Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் சாதிப் பெயர்களை கூற தடை..! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!!

Senthil Velan
வியாழன், 4 ஜனவரி 2024 (16:28 IST)
ஜல்லிக்கட்டு காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூறக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  
 
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற உத்தரவிடக் கோரி மதுரை மானகிரியை சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 
ALSO READ: குண்டும் குழியுமாக மாறிய மரண சாலை..! கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்..!!

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
இதில் காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூறி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்க்க கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments