அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான வழக்குகள் ரத்து - முதல்வர் ஸ்டாலின் ஆணை

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (20:14 IST)
அரசியல் கட்சி பிரமுகர்கள் 130 பேர் மீது போடப்பட்டுள்ள  அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆட்சியி பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அரசியல் கட்சி பிரமுகர்கள் சுமார் 130 பேர் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆணையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை விஜயகாந்த், நாஞ்சில் சம்பத், கே.என்,நேரு,. கனிமொழி எம்.பி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் 130 பேர் மீது போடப்பட்டுள்ள  அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments