Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமரா… பொது நல வழக்கு!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:43 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கள்ளச்சந்தையில் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 32 ஆயிரத்து 722 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் மக்களின் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, ஜீனி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை விநியோகிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் பயன்பெறுகின்றன.

இந்நிலையில் இவ்வாறு அரசால் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு முழுவதுமாக சென்று சேர்வதில்லை எனவும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைத் தடுக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments