Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கேன் தண்ணீர் விலை: தொடரும் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (11:33 IST)
சென்னையில் கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் குடிதண்ணீர் கேன்களின் விலை ஏற தொடங்கியுள்ளது.

தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

இதற்கு கேன் குடிநீர் விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனுமதி பெறாத ஆலைகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சீல் வைக்கக்கூடாது என்றும், இதனால் கேன் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் சிரமப்படுவார்கள் என கூறியுள்ளனர். தற்போது ஆலைகள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் தண்ணீர் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சிலர் கேன் தண்ணீர் விற்பனையை நிறுத்தி போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர்.

விற்பனையாளர்களின் போராட்டம் மற்றும் குடிநீர் ஆலைகள் மூடல் ஆகியவற்றால் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் மற்ற கேன் தண்ணீர் நிறுவனங்கள் விலையை அதிகரித்து விற்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் நகர மக்கள் கேன் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருவதால் இது மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

அடுத்த கட்டுரையில்
Show comments