Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டிற்கு நீர் தர முடியாது..! கர்நாடக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!!

edapadi

Senthil Velan

, புதன், 13 மார்ச் 2024 (16:21 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்
 
கோடைக்காலம் நெருங்குகின்ற இந்த வேளையில், தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.

 
நீரை பெற திராணி அற்ற இந்த விடியா அரசின் முதல்வர் தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, தன்னுடைய கூட்டணி கட்சி முதல்வரைக் கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக செயல்படுத்தி தமிழ்நாட்டிற்கான நியாயமான காவிரி நீர்ப் பங்கீட்டினைப் பெறுமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்..! பிரதமர் மோடி பெருமிதம்..!!