பள்ளி வாகனங்களில் கேமரா கண்டிப்பா இருக்கணும்! – தமிழக அரசு உத்தரவு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:43 IST)
மோட்டார் வாகன சட்ட திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி வாகனங்களில் கேமரா அமைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் பள்ளி வளாகத்திலேயே நடந்து சென்றபோது ரிவர்ஸில் வந்த பள்ளி வேன் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மேலும் சில பள்ளி வாகன விபத்துகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா அமைப்பது, மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது உள்ளிட்டவற்றை முறைப்படுத்த கோரிக்கைகள் எழுந்தன.

ALSO READ: தொடர் சரிவில் தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்!

தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் மற்றும் விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளி வாகனங்களில் மாணவர்கள் விபத்திற்கு உள்ளாவதை தவிர்க்க வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் கேமரா அமைப்பது மற்றும் பின்பகுதியில் சென்சார் அமைப்பது உள்ளிட்டவை கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments