Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரின் வளர்ப்புமகன் தற்கொலை – போலிஸ் விசாரணை !

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (08:28 IST)
சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் வளர்ப்புமகனான லோகேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் வீட்டில் வளர்ந்து வந்த அவரது வளர்ப்பு மகன் (தங்கை மகன்) லோகேஷ் என்பவர் அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று காலை உணவை முடித்துவிட்டு மேலே தன் அறைக்கு சென்றவர் கீழே வராததால் சந்தேமடைந்து மேலே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

லோகேஷின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பிரேதப் பர்சோதனை முடிந்தபின்னர் அமைச்சரின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வேலைப் பார்த்து வந்த 26 வயதாகும் லோகேஷுக்குத் திருமணம் செய்து வைக்க சமீப காலமாக அவரது குடும்பத்தினர் முயன்று வந்துள்ளனர். ஏற்கனவே சி வி சண்முகத்தின் அண்ணன் சி வி ராஜேந்திரனின் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் அவர்கள் குடும்பத்தில் நடந்துள்ள இன்னொரு துர்சம்பவம் குடும்பத்தார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments