Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 161 நாட்களுக்குப்பின் ஓடிய பேருந்துகள்: பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு?

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (07:13 IST)
சென்னையில் 161 நாட்களுக்குப்பின் ஓடிய பேருந்துகள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது தெரிந்தது. அந்த வகையில் இன்று காலை முதல் சென்னையில் மாநகரப் பேருந்துகள் ஓடத் துவங்கி உள்ளன
 
சென்னையில் மட்டும் என்று 3300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், ஒரு இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என்றும் நின்று கொண்டு, படிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் வரையிலும் ஜிஎஸ்டி சாலையில் கூடுவாஞ்சேரி வரையிலு,ம் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையிலும், பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரையிலும், செங்குன்றம் சாலையில் பாடி வரையிலும் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சென்னையிலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு பேருந்து இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments